Friday, September 29, 2006

காதல்???!!!!

தன்னிலை தவறி தத்தளிக்கின்றான் தண்ணீரில்
தேவதாசாம்!!!
தேடிய தேவதை தவிக்கவிட்டதால்
தீயிலே தகிக்கவிட்டான் தேகத்தை.

நீர்கோலம்


வாழ்க்கை ஓர் ஓடம் - அது
நீர்மேல் இட்ட கோலம் - அது
அடையும் கோலம் - கண்டு
மனம் அடையும் கோலம் - என்றென்றும்
மனம் பிரியா சோகம்.

தேவதை

காற்றை கிழித்துக்கொண்டு சென்றது கார். கதவருகே கண்மூடி அமர்ந்திருந்த காஞ்சனாவை கண்ணாடி வழியே கண்டபோது காதலைவிட காமமே முன் நின்றது.

"காதலுக்கும் காமத்திற்கும் நூலிழை தான் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ" என்று நண்பனுக்குக் கூறியது நினைவுக்கு வந்தது.

காரின் வேகத்தை மிஞ்சியது மனம். வேகத்தடைக்கு வழி தேடி தவித்தேன். இருள் சூழ்ந்த தனிமையும், குளிர்சேர்ந்த காற்றும், அவள் கவர்ச்சிமிகு கண்களும் என்னை கிரங்க வைத்தது.

'வெள்ளைத் தாமரை தேவதையே என் வேண்டுகோளை கேளடியே' என்று அவள் மடியில் முகம் புதைக்க மனசு ஏங்கியது. ஈரக்காற்றோடு சாரல் சேர்ந்து கொள்ள கார் ஜென்னல்களை ஏற்றிவிட்டாள்.

'சாரல் உள்ளும் அடிக்கிறதே', மூடமுயன்றேன். மழை வலுக்க மரநிழலில் காரை நிறுத்தினேன். உள்ளும் வெளியும் குளிர் அடிக்க குற்ற உணர்ச்சியில் குன்றிப் போனேன்.

அவளை இறுக்க அனைத்து உதடோடு உதடு சேர்த்து உடலோடு உடல் சேர்த்து அவளுக்குள் பின்னிப் பினைந்தேன் கற்பனையில்!
'கற்பனையே இனிக்கிறதே, துணிந்து செய்' என்றது காமுக மனது. கண்கள் மூடி இன்னும் அமர்ந்திருந்தது அந்த கனிச்சோலை.

முன்கதவை திறந்து இறங்கி பின்கதவை திறக்க முயன்றேன். பயம் கவ்விக் கொண்டது. திடம் பெற ஒரு சிகரெட் பற்ற வைத்தேன். மூன்று மாதங்கள் அவளுடன் பழகியும் கடந்த ஓர் மாதமாக அவள் மேல் ஏற்பட்ட தாகத்தின் தாக்கம் என் பெருமூச்சாக புகையோடு சேர்ந்து வந்தது. இது தவறு என்று உணர்த்திய அறிவை ஆசை வெகுவாக வென்றது.

'காமுகா கெடுத்துவிட்டாயே என் வாழ்க்கையை?!' கதறுவாளே அவள். இவைகள் காதுகளில் விழ மறுத்தன.

காரை நோக்கி நடந்து பின்கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். மெதுவாக அவள் கைகளை பற்றினேன் சில்லிட்டது மெல்ல நகர்த்தி அவள் இடுப்பை பற்றினேன். அவள் இன்னும் கண்கள் மூடியபடியே இருந்தாள். அவள் முகத்தில் ஓடிய மெல்லிய புன்னகை என்னை தைரியம் பெறச் செய்தது. அவள் மேலாடை நீங்கிய அழகு என்னை அள்ளிச் சென்றது. அவளை அனைத்து அவள் மார்பில் முகம் புதைத்தேன் மனதில் பயம் தோன்ற அவளை நேர்கொண்டு பார்த்தேன். எப்பொழுதும் ஏறி இறங்கி அசையும் அவள் மார்புகள் அசைவின்றி இருந்தது. நாடி பிடித்துப் பார்த்தேன் துடிப்பு இல்லை. அவள் கையிலிருந்த காகிதத்தை கண்டேன். பிரித்துப் படித்தேன்.


அன்புள்ள ஷீராம் அவர்களுக்கு,

முதலில் என் நன்றி கலந்த வணக்கத்தை சொல்கிறேன். நீங்கள் என் வாழ்வில் மிகச்சிறந்த திருப்பத்தை ஏற்படுத்திய மனிதர். உங்களை நான் தெய்வமாகவே வணங்கினேன். என் கணவர் மறைவிற்குப்பின், என்னை ஒரு தாசியாகவே அனைவரும் பார்த்தனர். நீங்கள் மட்டும் தான் என் தேகத்தை தாண்டி என் உள்ளத்தை கண்டு அடைக்கலம் தந்தீர்கள். இதனால் தான் உங்களுக்கு எத்துனை அவச் சொற்கள், என் பொருட்டு நீங்கள் பெற்ற அவமானங்களை நான் அறிவேன். ஓர் ஆணும் பொண்ணும் இச்சமுதாயத்தில் சேர்ந்து நண்பர்களாக வாழ இயலாது. அதை ஏற்கும் நல்லுள்ளம் எவருக்கும் இல்லை.

என் கணவர் இறந்து மூன்று மாதங்கள் நீங்கள் என்னை காப்பாற்றி வந்தீர்கள். என்னை தவறான எண்ணத்தில் ஒரு பார்வை கூட பார்த்ததில்லை. இது என்னை வெகுவாக கவர்ந்தது. என் கணவரின் நண்பர் என்ற உணர்வைத் தாண்டி உங்கள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. இது சரியா தவறா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் உங்கள் நண்பனிடம் நீங்கள் கூறியது என்னை தலைகுனியச் செய்தது.

'மனசு சுத்தமாய் இருந்தா சிவப்புவிளக்கு பகுதியில் கூட நேர்மையாக வாழலாம். அவ நெருப்புடா' என்று நீங்கள் கூறியதை கேட்டு என் நரம்புகள் துடித்தன. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் ஏற்றவள் நான் இல்லை. என் மனதில் காலான் முளைத்துவிட்டது.

'ஊராரின் ஏச்சுகளையும் பேச்சுகளையும் பொய்யாக்கலாம்' என்று அடிக்கடி நீங்கள் சொல்லுவீர்கள். உங்கள் நேர்மைக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. என் பொருட்டு பல தியாகங்கள் செய்த உங்களுக்கு நான் செய்யக்கூடியது நீங்கள் களங்கமின்றி வாழ, என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த உங்கள் நிழலில் என் வாழ்வை முடித்து கொள்கிறேன். நீங்கள் நன்றாக வாழ என் இறைவனை வேண்டுகிறேன்.

என்றும் நன்றியுடன்

காஞ்சனா

மனம் அவமானத்தால் புழுங்கிற்று. என் உண்மை ரூபம் தெரியாமல் இந்த காமுகனை கடவுள் என்று எண்ணி தன்னையே அழித்துக் கொண்டுவிட்டாள். என்னை மனிதனாக மாற்றிவிட்டு மாண்டுவிட்டாள்.

******************************

'ஷீராமச்சந்திர மூர்த்திக்கு அடுத்து எங்க வீட்டுக்காரர்தான். அவர் கூட சீதா தேவியை சந்தேகப்பட்டார். ஆனால் என் கணவர் என்னையும் சந்தேகிக்கமாட்டார்; எனக்கு துரோகமும் நினைக்ககூடமாட்டார்' என்று இன்னும் என் மனைவி மற்றவர்களிடம் கூறியது காதில் விழுந்தது.

'என்னப்பா தூங்கறீங்க வந்து பாடம் சொல்லித்தாங்க' என்று என் மகள் அழைக்க என் கடைமைகளை ஆற்ற எழுந்து சென்றேன், மனதில் என்றும் தேவதையாய் நிலைத்து நின்ற என்னவளுக்கு நன்றி கூறியடியே.

Tuesday, September 26, 2006

பயம்

"வா வஸந்த் வா, உள்ளவா",

சுமதி இவ்வாறு அழைப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவளை அவன் நண்பனுடன் மணக்கோலத்தில் பார்த்த போது கூட இவ்வளவு அதிர்ச்சி அவன் அடையவில்லை.

"என்ன வஸந்த் ஏன் வெளியே நிற்கிறாய்?" என்று அவள் குரல் உள்ளிருந்து கனீரென்று கேட்க அவன் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டவனாக உள்ளே சென்றான்.

"வந்து ..." வார்த்தைகள் வர மறுத்தன.

"நான் அசோக்கை பார்க்க வந்தேன், அவன் இல்லை?" என்றான்.

உண்மையில் அதுவல்ல காரணம் என்பது அவளுக்குத் தெரியும் என்பது அவனுக்குத் தெரியாது.

"இப்போதான் கிளம்பி வெளியே போனார் இதோ வந்துருவார் நீ உட்கார் என்ன சாப்படரே டீ ஆர் காபி" என்றாள்.

நான் கிளம்பறேன் என்று எழுந்தான். அப்போது தான் அது நடந்தது.

அவள் "வஸந்த்" என்றபடி அவனுடைய மார்ப்பில் சாய்ந்து கொண்டாள். அவள் கண்களில் இருந்து வந்த துளிகள் அவன் மார்பை நனைத்தது. அவள் முகத்தை கைகளில் ஏந்தினான். இந்த அழகு முகத்தை எவ்வளவு வருடங்கள் ரசித்திருப்பான்!

"இந்தா காபி" என்ற அவள் குரல் அவனை எழுப்பியது.

"சீ கனவா?" என்று அவன் கூறியது அவள் காதுகளில் விழுந்தது.

"நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன். நீ என்னை பார்க்கத்தான் வந்தேன்னு எனக்குத் தெரியும். நான் என் பழைய வாழ்க்கையை மறந்துட்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டு இருக்கேன். அதனால் இனிமே நீ இங்கே வராதே. என்ன மறந்திடு, மன்னிச்சிடு"

என்று அவள் சொல்லும் பொழுதே அதற்குமேல் வார்த்தை வர இயலாமல் அழுதே விட்டாள்.

அவளுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாத பொழுதும் தான் நினைத்து வந்ததையே அவள் கூறியதை கேட்டு அவனுக்கு மெய் சிலிர்த்தது.

தான் இனிமேலும் அங்கு போகத்தேவையில்லை என்று நினைத்துக்கொண்டே, தன் தந்தையை எதிர்க்கத் துணிவில்லாமல், தன் தங்கையின் திருமணத்தை ஆதரிக்க முடியாத நிலையில் அவளின் தற்போதைய வாழ்க்கைக் காணக்கூட, யாருக்கும் தெரியாமல் வந்த வஸந்த், அவள் நன்றாக இருந்தாலே போதும், என்று ஆண்டவனை வேண்டிக்கொண்டே, அவளின் துனிவு இவனுக்கு வருமா?! என்று வியந்தவாறு தலை குனிந்து யாரும் பார்த்துவிடுவாரோ என்ற பயத்துடன் சென்றான்.

Saturday, September 23, 2006

இயலாமை

அந்த இளைஞன் சதா அவள் மேல் இடித்துக் கொண்டே இருந்தான். பேருந்து என்றாலே இப்படித்தான். அதுவும் பல்லவன் கழகம் என்றால் சொல்லவா வேண்டும். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

இப்படி நடப்பதும் ஒரு பிழைப்பா என்று எண்ணிக் கொண்டேன். பேருந்தில் பயணம் செல்லும் எந்த பெண்ணுக்கும் இந்த நிலைமை தான் என்பது எனக்கு நன்கு தெரியும்.

'என்ன செய்வது பொறுத்துத்தான் போக வேண்டும் பெண்ணாகப் பிறந்துவிட்டோமே!' என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.

நான் மட்டும் என்ன விதிவிலக்கா? அப்படித்தான் நானும் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பேன் ஆனால் அன்று மனம் கேட்கவில்லை

'இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படிக் கழிப்பது? பெண்கள் என்றாலே இதுதான் கதியா?? ' கொதித்தது என் மனம் எழுந்து நாலு அரை கொடுத்து விடலாமோ என நினைத்தேன்.

பின் விளைவுகளை பற்றிய பயம் எனக்கு இருந்தாலும் அன்றுமட்டும் என்னால் சும்மா இருக்கமுடியவில்லை எழுந்தேன்.

"ஏன்யா நீங்க அக்கா தங்கச்சியோட பொறக்கல! இப்படி படுத்தறீங்க அந்த பொண்ண. கேட்க ஆளில்லை என்ற திமிரா?" என்றேன் சற்று அதட்டலாக.

உடனே அவனிடமிருந்து வந்த பதில் என்னை அதிர்த்தது. அவை
"ஏன் நாத்தியப்பார்க்க இவ்வளவு இஷ்டமா? சொன்னா கூட்டியாந்திருப்பேனே".

இது என் ஆழ்மனதை பாதித்தது. நான் வெலவெலத்துப் போனேன். பேருந்தே என்னைப் பார்த்தது நான் அமைதியானேன்.

நிருத்தம் வந்ததும் நானும் அந்த பெண்ணும் இறங்கினோம். அந்தப் பெண் என்னிடம் வந்து

"ஏம்மா அவனுங்ககிட்ட போய் வாய்க்கொடுக்கரீங்க அதுங்க எல்லாம் திருந்தா ஜென்மங்க. விட்டுத்தள்ளுங்க இப்படி உரசிப்பார்ப்பதில் என்ன பெரிய சந்தோஷமோ!! செவிடன் காதுல சங்கூதி என்ன பயன். இப்ப சொல்லறேன், நானும் ஒரு போலீஸ்காரன் பொண்ணுதான் இவனுங்கள என்ன செய்ய முடியும் எல்லாம் விதி. எப்படியும் நீங்க செய்த ஹெல்பிற்கு ரொம்ப நன்றிங்க. இனிமே இவனுங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க. நான் வரேன்" என்று அவன் சொல்லிப்போனதை திடுக்கிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

கனவின் இனிமை

காலை மனி 10. ஆண்டவனை வேண்டிக்கொண்டு கொடுக்கப்பட்ட வினாத்தாளை பிரித்தேன்.

"Thank God" கிட்டத்தட்ட கத்தியே விட்டேன்.

மேற்பார்வை பார்க்க வந்தவர் "என்ன?" என்றார்.

அனைவருடைய கண்களும் என் மேல். சற்று வெட்கப்பட்டுக்கொண்டே

"ஒன்னுமில்லை!" என்றேன்.

பத்து மதிப்பெண்கள் தரப்படும் 10 கேள்விகளுக்கு வேகமாக பதில் எழுத ஆரம்பித்தேன். அரை மணி நேரம். அட ! என்னால் நம்ப முடியவில்லை. பின் சரசரவென அனைத்தையும் முடித்துவிட்டு மணியை பார்த்தேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது.

நிதானமாக தாளை சரி பார்த்தேன் okay என்று தோன்றியது. தாளை கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். கீழே என் நண்பர்கள். ஒரு மதிப்பெண் விடைகளை சரி பார்த்தேன். அனைத்து விடைகளும் சரியாக எழுதியிருந்தேன். அட என்ன இது?

'நீ தேரப்போவதில்லை என்ற சொற்கள் பல என் காதுகளில் விழுந்தது தேர்வுக்கு முன்னால்! என்னால் கூட எழுத முடியும் நிச்சியமாக முடியும், இதை நான் நிரூபனம் செய்து இருக்கிறேன்'.

"ராகுல்! டேய் ராகுல்! எழுந்திருடா எருமைமாடு" அப்பாவின் குரல் பள்ளியில்? சற்று நேரத்தில் நீர் துளிகள் என் முகத்தில்; துடைத்துக் கொண்டு எழுந்தேன்.

'என்ன ஒரு கனவு?' என்று நினைத்தேன்.

கனவைப் பற்றி வெளியே சொல்ல முடியவில்லை. சொன்னால் இன்னும் சேர்த்து வைத்து திட்டுவார்கள் என்று அலுத்துக் கொண்டே குளியலறை நோக்கி தளிர் நடை போட்ட படி சென்றான் மார்ச் தேராமல் அக்டோபரிலாவது பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதி கொண்டு வேதனையின் விலும்பில் நின்றிருந்த ராகுல்....

memories that wld last forever


Yest had been one of my best day in life...

Though u ppl wld not be surprised i wld have 3 pairs of eyebrows raised seeing this.....
yest my roomie left us and went back home... so it shld have been a sad day right.. but to be true it really turned out to be a grt day for me...

wait dont start to curse me..i meant it gave me a chance to know abt myself and how much she had occupied my life..... rather to say all our life..[we were close to tears when she departed in the airport ofcourse i had my icecream still in hand which we all had not actually enjoyed]

she had been with me in school. but the intimacy we hadnt got in those 2 yrs, was got in this 4 months. She had been our official jester.. every word she utters would turn out to be a joke...I cant forget those momements when my another roomie wld try to swallow water with grt difficutly as she wld not be able to control her laughter... This had been our usually way to tease her. whenever she drinks water i wld ask my roomie to spk so that the other wont be able to drink water properly...

Every second had been a grt event for us... we enjoyed every moment of life. those late nightes chats [we indeed got grt opposition from our association for being a cause of noise pollution], songs that we used to sing together during cooking the night shows [dont panic we used to sing good only.. all ilayaraja's beats as we both like them a lot], the back to back show of cars and sentinal [ that surprisingly turned out to be a noon show], the new dishes that we make [all the old dishes only but with new procedure as we dont know the exact procedure], the weekends we shared,....... this wld go on and on and on..

Above all, our hearts were filled with tears by the surprise that she had left for us... i had replayed a crystal maze/treasure hunt to get the gifts that she had left in our home[though very small] with clues in the cards... i dint know when she cld have done them.. The ganesh idol she had kept as a gift was very cute....

i miss her rather we miss her!!!!! we wld definitely miss her a lot....

Friday, September 22, 2006

Just a thought

This blog of mine is not meant dedicated for tamil . So here comes my new addup.....

I am not that good at english write ups. This is my first try.... everything shld have a start and here goes mine now...

I am very scheduled person [dont ask ppl who had waited 4 me for hours as they wld give a different pic of mine] I mean i like to do things at time [rather to say i am been practised to do so] In my home my dad is very perfect in these things.. he likes to get up early and sleep early.. in our home the lights shld be off by max 10pm. I know many wld feel this quite early but we had no choice.. I am the only exception to this rule as during exam i used to stay late [that to max 12 only allowed]. Because of this I was even forced not to see my favourite serial [Manaivi at 10pm in SUN Tv]. Never mind let me get to the topic ...

My life at pune had changed many things.. And one important event is my eating and sleeping time. Our time pass is generally watching movies that too nightshows only... I am not a person who goes for theaters and this transition is quite a great leap for me.

The total number of night shows i have seen in this 6 months stay is more than the number of films i had seen in theater in my entire life.. Its just dozen or so but still this count is more. Each movie was a new experience for me... Of all the movies i loved "CARS" , "Over the headge", "Lage Rago Munnabai", "SUPERMAN RETURS".

Its worth going to cars. It is an animated film by "PIXAR" .. Their last release "FINDING NEMO" was my favourite.. I had watched that moive in theater for 4 times. 3 times in the Studio 5 screen of Sathyam complex.. And 4th in my CD player.. 'Cars' is another masterpiece of them. I loved it a lot. Here goes its review...

This is about a car - 'Lightning Mc Queeen' [our hero] who participate in a race for Piston cup winning which had been his life time ambition. The race ends with 3 cars coming first. So the judges decide to keep the final run in California after 5 days. Our hero is little arrogant and crooky...The stroy unwinds with our little hero realizing the fact that life is about playing and not winning and also living and working together is grt fun rather than stand alone.

While his journey to his race spot which happened to be at other end, he looses track and goes to a town Radaitor Springs in Route 66 [which got unused due to the new routes constructed]. Here he comes across the grand master "Doc Hudson" who had been the champion for many yrs of the Piston cup. Also the "Master" a rusty truck wins over the love of our hero and helps him in his country service.

Even in this film they havent forgotten the romance. So here we go to introduce our heroine "Sally". She is cute car and her blue color makes her look gorgeous. In his race Doc himself comes as his trainer and finally though our little hero doesnt win the cup he wins the heart of entire world by helping a fellow car who got stuck in between the race to finish his last lap......

The screen in full of cars.. Even the bees and flies r in the shape of cars. The picturization is excellent. When Sally goes past the waterfall and our hero looks it from distance, the love that is shown in both of their eyes is worth mentioning. [This scene is enjoyed the most]. Also the emotions of all the cars when they came to know that Mc Queen is going to leave them , the silly games that Master and Mc Queen plays by waking up all the tracktors , Master driving in reverse gears, the most famous quote "To turn right u have to turn left" by Doc are grt....

Its worth a movie and i enjoyed it a lot though it dint beat my "Finding Nemo......"

Thursday, September 21, 2006

மெழுகுவர்த்தி

உயிர் கொடுத்து உருகியுருகி படிக்க வைக்கின்றேன்
என்றாவதொருநாள்
மற்றவருக்கு உயிர் கொடுப்பாய் என்று



காற்று கண்ணத்தில் அறைந்ததும்
அழுவதை நிறுத்தியது மெழுகுவர்த்தி!!!!

Tuesday, September 19, 2006

இதுவே கவிதையோ !!!


வார்த்தைகளை கோர்த்தால் கவிதை
வெறும் எழுத்துக்களைக் கோர்த்தேன் கவிதையானது!!
அடி என்ன இது உன் பெயர் எழுதிய காகிதம் கூட மணக்கிறது.

Friday, September 08, 2006

மரத்துண்டு [log of wood]

ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தான்
கைப்பிடித்தேன்
கரைசேர்பதற்கு !! -
இன்று
அலைகின்றேன் விழிகளில் நீர்துளிகளோடு
என்னை கரைசேர்க்கும் நல் இதயத்தை
காண்பதற்கு

இது தான் காதலோ!?!?


வெய்யிலில் உறைகிறேன்
பனியில் வேர்கிறேன்
ஏன் இந்த மாற்றம் என்றேன்
நன்பனிடம்
சீதோஷண நிலை மாற்றமோ?
என்றான்
ஆம் ஆனால் வெளியே அல்ல உள்ளே!!!!!